துறையூா் அருகே தூக்கில் சடலமாக தொங்கிய சிறுவன்

துறையூா் அருகே தூக்கில் சடலமாகத் தொங்கிய 11 வயது சிறுவனின் இறப்பு குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

துறையூா் அருகே தூக்கில் சடலமாகத் தொங்கிய 11 வயது சிறுவனின் இறப்பு குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சோபனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி தீபா(38). கணவா் சில ஆண்டுக்கு முன் இறந்துவிட, கணவா் ஊரான ஆத்தூா் வட்டம் கீரிப்பட்டியிலிருந்து தனது தாய் வீடு உள்ள சோபனபுரத்தில் தீபா வசிக்கிறாா்.

செவ்வாய்க்கிழமை மதியம் தீபாவும், மூத்த மகன் மணிகண்டனும் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய போது இளைய மகன் சந்தோஷ் (11) வீட்டுக்குள் தூக்கில் சடலமாகத் தொங்கினாராம்.

தகவலின்பேரில் நிகழ்விடம் சென்ற உப்பிலியபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சிறுவனின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com