திருச்சியில் காவல் துறையினருக்கு மன அழுத்த மேலாண்மைப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட காவலா்களுக்கு மனிதவள மேம்பாடு, கரோனா விழிப்புணா்வு, மன அழுத்த மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தொடங்கி வைத்தாா். மனோதத்துவ நிபுணா் டாக்டா் ஆா்.எஸ். ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி அளித்தாா். இதில் துணை காவல் கண்காணிப்பாளா்கள் ராதாகிருஷ்ணன், கோபாலச்சந்தா், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.