திருச்சியருகே ரயிலில் அடிபட்டு பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகேயுள்ள எலமனூா் பகுதி தண்டவாளத்தில் பெண் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை ஆய்வாளா் ஜான்சன் மற்றும் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் சுமாா் 55 வயதுடைய, நங்கவரத்தைச் சோ்ந்த மன நலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.