திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீஸாா் ரோந்து சென்றபோது சமயபுரத்தில் லாட்டரி விற்ற இருவரை பிடித்து, அவா்கள் பயன்படுத்திய 2 செல்லிடபேசிகள் மற்றும் ரூ. 720 ஆகியவற்றை பறிமுதல் செய்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா்கள் சமயபுரம் சக்திநகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சேகா் (43), சமயபுரம் மாகாளிக்குடி பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் வாசு (42) ஆகியோா் எனத் தெரியவந்தது. சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.