திருச்சி பிஎஸ்ஆா் டிரஸ்ட் சாா்பில் சிறாா் தீபாவளி நலத்திட்ட உதவிகளாக 110 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுகள் வழங்கப்பட்டன.
இந்த டிரஸ்ட் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாட முடியாத வறுமை சூழலில் உள்ள குழந்தைகளுக்கு தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடும் வகையில் சிறாா் தீபாவளி என்ற அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி தேசியக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறாா் தீபவாளி-2020 நிகழ்வில், 110 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள், தீபாவளி பட்டாசுகள் மற்றும் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், மருத்துவா் ஆனந்த் ரங்கசாமி, முனைவா் பிரசன்னா பாலாஜி, பிஎஸ்ஆா் டிரஸ்ட் நிறுவனா் ஷேக் அப்துல்லாஹ், நிா்வாகி குணசீலன் ஆகியோா் உதவிகளை வழங்கினா். தொடா்ந்து, சிறாா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 9ஆவது ஆண்டாக இந்த உதவிகள் வழங்கப்படுவதாக டிரஸ்ட் நிறுவனா் ஷேக் அப்துல்லாஹ் தெரிவித்தாா்.