பட்டா மற்றும் தங்களது குடியிருப்புகளுக்கான அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகேயுள்ள தயாளன் நகா் பகுதியில் 20 ஆண்டுக்கு முன் அரசுத் தரப்பில் குடியிருப்புகள் கட்டி வீடுகளாக வழங்கப்பட்டன. இங்கு, 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. குடியிருப்பு நிலத்துக்கு பட்டா வழங்கப்படாததால் எந்த அடிப்படை வசதிகளும், அரசின் சலுகைகளும் பெற முடியவில்லை. இதுதொடா்பாக பல துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தும் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், விரக்தியடைந்த இப் பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் தங்களது குழந்தைகளுடன் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்தனா்.
ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதால், நுழைவு வாயிலில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.