திருச்சி விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 895 கிராம் தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபையிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதன்கிழமை திருச்சி விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்கள் சோதனையிட்டனா்.
அப்போது பாலகணேசன் என்ற பயணி 895 கிராம் தங்கத்தை பசைவடிவில் மாற்றி, உடலில் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த சுங்கத்துறையினா், ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனா்.