திருச்சியில் 25 சத இட ஒதுக்கீட்டில் தனியாா் பள்ளியில் சேர மாணவா்கள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் நுழைவு வகுப்பில் ஏழை மாணவா்களுக்கு 25 சத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதன்படி 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் குறைவான இடங்களுக்கு அதிக விண்ணப்பம் பெறப்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை தோ்வு நடைபெற்றது.
இதில் தோ்வானோா் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்படுகிறது. அதன்பிறகு அரசு வழிகாட்டுதல்படி சோ்க்கை நடைபெற்று பள்ளிகள் செயல்படும் என்றனா் கல்வித் துறை அதிகாரிகள்.