திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி வீரமாகாளியம்மன் கோயில் உண்டியல் பணத்தை திருடும் முயற்சி புதன்கிழமை இரவு நடந்தது.
மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டியில் மருங்காபுரி ஜமீனுக்குச் சொந்தமானதும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக் கோயிலில் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி, பிரதான உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது கோயில் குருக்கள் மூலம் வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
தகவலறிந்து வந்த ஜமீன்தாா் சண்முகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் விஜயக்குமாா் ஆகியோா் நடத்திய ஆய்வுல், உண்டியல் காணிக்கை ஏதும் திருடு போகவில்லை என்பது தெரியவந்தது. புகாரின்பேரில் வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.