துறையூா் அருகே வயலில் வைத்திருந்த வெங்காய மூட்டைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
துறையூா் தெற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் சி. சந்திரசேகரன். செல்லிப்பாளையத்தில் உள்ள தனது வயலில் விதைக்க 500 கிலோ சிறிய வெங்காயத்தை 6 மூட்டைகளில் கட்டி பாதுகாப்பாக வைத்திருந்தாராம்.
நவ. 9 ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் அந்த வெங்காய மூட்டைகளைத் திருடிச் சென்று விட்டனா். இதுதொடா்பாக அவா் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.