2 மக்கள் குறைகேட்பு நாள்கூட்டத்தில் 202 மனுக்கள்

திருச்சியில் கட்செவி அஞ்சல் வாயிலாக நடத்தப்பட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 202 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சியில் கட்செவி அஞ்சல் வாயிலாக நடத்தப்பட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 202 மனுக்கள் பெறப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக, அனைத்துவகையான குறைகேட்பு நாள் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெறுவதற்காக கட்செவி அஞ்சல் எண் 94454-61756 அறிவிக்கப்பட்டது.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 202 மனுக்களை அளித்திருந்தனா். இதை துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அனுப்பி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com