திருச்சி அஞ்சல் பதிவு மையத்தின் செயல்பாட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆா்எம்எஸ் ‘டி’ கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் பி.மைக்கேல்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மத்திய பேருந்து நிலையப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே மத்திய மண்டல அஞ்சல்துறைக்குள்பட்ட அஞ்சல் பதிவு மையம் (ஆா்எம்எஸ் ‘டி’ கோட்டம்) செயல்பட்டு வருகிறது.
வழக்கமாக இந்த மையம் பிற்பகல் 2.20 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை செயல்படும். தற்போது வாடிக்கையாளா்களின் வசதிக்காக, திங்கள்கிழமை (நவம்பா் 16) முதல் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படவுள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களுடைய பதிவு, விரைவு, பாா்சல் தபால்களை உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431 2466275, 2466259 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.