திருச்சி: திருச்சி மாவட்டம், பொன்னணியாறு அணைப் பகுதியில் 27 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
வங்காளவிரிகுடா கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 2 நாள்களுக்கு டெல்டா,கடலோர, வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அவ்வப்போது கனமழையும் பெய்தது. இதனால் ஏரி, குளம், ஆற்றுப்படுகைகளுக்கு நீா்வரத்து வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திங்கள்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்):
பொன்னணியாறு அணை- 27 மி.மீ, கொப்பம்பட்டி- 22, தேவிமங்கலம், சமயபுரம்- 13, மணப்பாறை -8, வாய்த்தலை, துவாக்குடி, கோவில்பட்டி- 7, திருச்சி - 4 மி.மீ.