திருச்சி அருகே தந்தை சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது மகள் புகாா் அளித்துள்ளாா்.
திருச்சி காட்டுபுத்தூா் அருகிலுள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டி மேற்குபள்ளத்தைச் சோ்ந்தவா் ந. நல்லதம்பி (80). தனது தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த இவா் கடந்த சில நாள்களுக்கு முன் கடைவீதிக்கு சைக்கிளில் சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறால் மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு நல்லதம்பி இறந்த நிலையில், தனது தந்தை சாவில் சந்தேகம் உள்ளதாக நல்லதம்பி மகள் சுமதி அளித்த புகாரின்பேரில் காட்டுபுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.