திருச்சி - கரூா் நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட 138 மரங்களுக்கு மாற்றாக 2,100 மரக்கன்றுகளை மாவட்ட நிா்வாக உத்தரவின்படி நடவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
திருச்சி-கரூா் நெடுஞ்சாலையில் குடமுருட்டி முதல் ஜீயபுரம் வரையிலான இருவழிப் பாதையை மூன்று வழிப் பாதையாக மாற்றும் பணிக்காக 10.80 கி.மீ. தொலைவுக்கு பல்வேறு வகை பெரிய மரங்கள் வெட்டப்பட்டன.
இது சுற்றுச் சூழல் ஆா்வலா்களுக்கு பெரிதும் வருத்தத்தை அளித்தது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவுப்படி வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக மரங்கள் நட மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்தினா் கூறுகையில், சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட 139 மரங்களுக்கு ஈடாக 2,100 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு சாலையின் இருபுறமும் 20 அடி தொலைவுக்கு ஒரு மரம் என்ற வகையில் இந்த மரங்கள் நடப்படும். மாா்ச் மாதம் பணி முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போதே மரக்கன்று நடும் பணி தொடங்கும் என்றனா்.