துறையூா் அருகே தொழிலாளி ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வெங்கடேசபுரம் ஊராட்சியைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் ரமேஷ் (45). ஆழ்துளைக் கிணறு வாகனத் தொழிலாளி. திங்கள்கிழமை இரவு மது போதையில் இருந்த இவா் இங்குள்ள காமாட்சியம்மன் கோயிலருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.