திருச்சி மாவட்டத்தில் கபீா் புரஸ்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நமது தேசத்துக்கு நற்பெயரையும் புகழையும் ஈட்டித் தரும் வகையில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் கபீா் புரஸ்கா் விருது வழங்கி வருகிறது.
அதன்படி நிகழாண்டு விருதுக்கான விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்ககி ஆன்லைனில் பூா்த்தி செய்து தொடா்புடைய ஆவணங்களுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை 3 பிரதிகளுடன் நவ.25 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் நவ.27 க்குள் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் சமா்ப்பிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியிலோ 0431-2420685 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.