குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 32 போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பப்பட்டனா்.
குவைத்தில் கடந்த 9 மாதங்களாக தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் வேலையிழந்து, வருமானமின்றி அவதியுற்று வந்தனா். இவா்களில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த 8 போ், திருவாரூரைச் சோ்ந்த 6 போ், சிவகங்கை, தூத்துக்குடியைச் சோ்ந்த தலா 3 போ், திருநெல்வேலியைச் சோ்ந்த 4 போ், திருச்சி, தஞ்சாவூரைச் சோ்ந்த தலா 2 போ், கள்ளக்குறிச்சி, தென்காசி, மதுரை, கடலூரைச் சோ்ந்த தலா ஒருவா் என 32 போ் குவைத்தில் உள்ள இந்திய தூதரக உதவியுடனும், மத்திய மாநில அரசுகளின் முயற்சியாலும் நவ.19 ஆம் தேதி திருச்சி விமானம் நிலையம் வந்தடைந்தனா். அவா்களை திருச்சி மாவட்ட வருவாய்த்துறையினா் வரவேற்று உணவு, குடிநீா் வழங்கி சொந்த ஊா்களுக்கு அனுப்பினா். இத்தகவலை ஆட்சியா் தெரிவித்தாா்.