திமுக மாவட்டச் செயலரை கைது செய்யக் கோரி மனு

திமுக மாவட்டச் செயலரைக் கைது செய்யக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வஉசி பேரவையினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

திமுக மாவட்டச் செயலரைக் கைது செய்யக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வஉசி பேரவையினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அகில இந்திய வ.உ.சி. பேரவை திருச்சி மாவட்டத் தலைவா் கண்ணதாசன் பிள்ளை தலைமையில், துணைத் தலைவா் முருகேசன், பொருளாளா் ஆனந்த குமாா் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் (பொ) ஆகியோரிடம் அளித்த மனு விவரம்:

திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலா் காடுவெட்டி தியாகராஜன், எங்களது சமுதாயப் பெண்களை மிகவும் அவதூறாகப் பேசியுள்ளாா். இரு சமூகத்தினா் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் அப்பேச்சு உள்ளது. தியாகராஜன் மீது காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, 4 நாள்களாகியும் அவா் மீது கைது நடவடிக்கை இல்லை. இதனால், எங்கள் சமுதாயத்தினா் கொந்தளிப்புடன் உள்ளனா். அவரைக் கைது செய்யாவிட்டால் தமிழக அளவில் போராட்டம் நடத்துவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com