திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,167 ஆக உயா்ந்தது.
வெள்ளிக்கிழமை குணமான 11 போ் உள்பட இதுவரை 12,827 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். கரோனாவால் இதுவரை 171 போ் உயிரிழந்துள்ளனா். 169 போ் சிகிச்சை பெறுகின்றனா்.