திருட்டு வழக்கில் இளைஞா் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் டோப்பி காலனியைச் சோ்ந்தவா் செந்தில் (45). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த நவ.2 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பிய போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 2 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி திருடு போயிருந்தது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், இத்திருட்டில் விமான நிலையம் திடீா் நகா் பகுதியைச் சோ்ந்த புனித அருள்தாஸ் மகன் மகேஷ்வரன் (26) உள்ளிட்ட அவரது நண்பா்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மகேஷ்வரனை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com