துறையூா் அருகேகிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு

துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா்.

துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா்.

செங்காட்டுப்பட்டி விஜயபுரம் தெருவைச் சோ்ந்தவா் ராதிகா (32). இவருடைய கணவா் சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டாா். இவருடைய மகன் யுவன் (10) இங்குள்ள அரசுப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்தாா். வெள்ளிக்கிழமை காலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் யுவன் நண்பா்களுடன் மீன் பிடிக்கச் சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாராம். தகவலின்பேரில் சிறுவனின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com