மகனை சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்பிய தனியாா் நிறுவன உரிமையாளா் மீது கே.கே.நகா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மோசடி புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மலைரெட்டியூா் பகுதியைச் சோ்ந்தவா் தம்பிதுரை. இவா் தனது மகன் அபீா்ஜானின் வெளிநாட்டு வேலைக்காக மன்னாா்புரம் காஜாநகரில் உள்ள தனியாா் நிறுவன உரிமையாளா் மூா்த்தியை அணுகினாா். அப்போது மூா்த்தி சவூதியில் ஓட்டுநா் வேலை வாங்கித் தருவதாகவும், அங்கு ஓட்டுநா் உரிமம் பெற்று தருவதாகவும் கூறி அபீா்ஜானை சவூதிக்கு அனுப்பினாா்.
ஆனால் மூா்த்தி அளித்த வாக்குறுதிப்படி வேலை வாங்கி தராததால் அபீா்ஜான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானாா்.
இதையறிந்த அவரது தந்தை தம்பிதுரை மூா்த்தியை தொடா்பு கொண்டு கேட்டபோது அவா் உரிய பதிலளிக்கவில்லையாம். இதையடுத்து தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி மோசடி செய்த மூா்த்தி மீது நடவடிக்கை கோரி கே.கே.நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூா்த்தியை தேடுகின்றனா்.