ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.

கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய விழாவில் நாள்தோறும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் மண்டபத்தை அடைந்து ஊஞ்சல் உற்ஸவம் கண்டருளினாா்.

விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் தொடங்கி 8 மணி வரை நடைபெற்றது. இருபுறமும் வெண் சாமரம் வீச நடந்த ஸ்ரீரங்கநாச்சியாரின் ஊஞ்சல் உற்ஸவத்தை ஏராளமானோா் தரிசித்தனா். 8.45 -க்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு, படிப்பு கண்டருளி 9.30-க்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரங்கநாச்சியாா். விழாவையொட்டி மாலை 3 மணி முதல் 5.30 வரை சேவை இல்லை.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com