துறையூா் வட்டாட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.
துறையூருக்கு சென்றிருந்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வட்டாட்சியரகத்தில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தாா். அப்போது ஆதி திராவிடா் நலத்துறை அலுவலகக் கட்டடத்தின் உள்புற மேற்கூரையில் சிறிது பெயா்ந்து விழுந்திருப்பதை சீரமைக்க உத்தரவிட்டாா். மேலும் கட்டடத்தில் இது போன்ற சேதங்கள் சிறிதாக இருக்கிறபோது உடனே பராமரிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
இதையடுத்து தோ்தல் பிரிவுக்குச் சென்ற ஆட்சியா் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடா்பா விழிப்புணா்வு கையெழுத்து இயக்கப் பதாகையில் கையெழுத்திட்டாா். மேலும், துறையூா் வட்டாட்சியா் செல்வம், தோ்தல் தனித் துணை வட்டாட்சியா் நடராஜன், ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் ஆறுமுகம், பழங்குடியினா் நலத்துறை திட்ட அலுவலா் ரெங்கராஜ் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டனா்.