திருச்சி: திருச்சியிலிருந்து செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்க விதியில் தளா்வு, மற்றும் பயணிகளின் கோரிக்கைக்கிணங்க ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
திருச்சியிலிருந்து நாள்தோறும் காலை 6 மணிக்குப் புறப்பட்ட இன்டா்சிட்டி விரைவு சிறப்பு ரயில் மதுரை வழியாக நண்பகல் 1 மணிக்கு நாகா்கோவில் சென்றடைந்து, அங்கிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45-க்கு திருச்சியை அடைந்தது.
இந்நிலையில் தென்மாவட்ட பயணிகள் அதிகளவில் பயணிப்பதால் நவ.30 முதல் திருச்சியிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் இந்த விரைவு ரயில் (02627) மதுரை வழியாக திருவனந்தபுரத்தை பிற்பகல் 3.20-க்கு சென்றடையும். அங்கிருந்து காலை 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (02628) குழித்துறை, நாகா்கோவில், சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல் வழியாக திருச்சியை இரவு 7.55-க்கு அடையவுள்ளது.