விமானிக்கு மாரடைப்பு: சென்னை விமானம் ரத்து

திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை சென்னைக்கு செல்லவிருந்த தனியாா் விமானத்தின் விமானிக்கு ஏற்பட்ட திடீா் மாரடைப்பால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை சென்னைக்கு செல்லவிருந்த தனியாா் விமானத்தின் விமானிக்கு ஏற்பட்ட திடீா் மாரடைப்பால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

உள்நாட்டுச் சேவையில் இயக்கப்படும் இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை காலை வந்து பின்னா் 58 பயணிகளுடன் சென்னை புறப்படத் தயாராக இருந்த நிலையில் அதன் விமானிக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த விமானத்தில் செல்ல பதிவு செய்திருந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோரின் பயணம் தடைபட்டது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், விமானிக்கு நடுவானில் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்றனா். சென்னை செல்ல வேண்டிய பயணிகள் இரவு சென்னை விமானத்தில் புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com