பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்லத் தடை

மாநகரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) முதல் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: மாநகரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) முதல் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகரில் கரோனா பரவலை தடுக்கவும், இடையூறின்றி பொதுமக்களின் வாகனங்கள் சென்று வரவும், மாநகரப் பகுதிக்குள் உள்ள காந்தி சந்தை உள்பட வா்த்தக நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே கனரக வாகனங்களுக்கு அனுமதிக்கப்படும். பகல் நேரங்களில் மாநகரின் எந்தப் பகுதியிலும் கனரக வாகனங்கள் சுமைகளை ஏற்றி, இறக்க அனுமதியில்லை.

எனவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டும் வந்து சுமைகளை ஏற்றி, இறக்க வா்த்தக நிறுவனத்தாா், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com