திருச்சி: மாநகரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) முதல் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாநகரில் கரோனா பரவலை தடுக்கவும், இடையூறின்றி பொதுமக்களின் வாகனங்கள் சென்று வரவும், மாநகரப் பகுதிக்குள் உள்ள காந்தி சந்தை உள்பட வா்த்தக நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே கனரக வாகனங்களுக்கு அனுமதிக்கப்படும். பகல் நேரங்களில் மாநகரின் எந்தப் பகுதியிலும் கனரக வாகனங்கள் சுமைகளை ஏற்றி, இறக்க அனுமதியில்லை.
எனவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டும் வந்து சுமைகளை ஏற்றி, இறக்க வா்த்தக நிறுவனத்தாா், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.