திருச்சி: பனையக்குறிச்சியில் கால்நடைகளுக்கு சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருச்சி கால்நடைப் பராமரிப்புத் துறை திருச்சி கோட்ட உதவி இயக்குநா் டாக்டா் அ. மருதைராஜூ தலைமையில் திருவெறும்பூா், கீழமுல்லக்குடி கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட பனையக்குறிச்சி ஊராட்சியில் வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் 200 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, 450 வெள்ளாடுகள், 30 செம்மறியாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது.
மேலும் 150 பசு, 15 எருமைகளுக்கு குடற்புழு நீக்கம், 30 மாடுகளுக்கு செயற்கைக் கருவூட்டல், 200 கோழிகளுக்கு தடுப்பூசி, 675 கால்நடைகளுக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் கால்நடை உதவி மருத்துவா்கள் ஆா். திருமலைச்செல்வி, ஜெ. ஜெயக்குமாா், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.