திருச்சி
லாட்டரி சீட்டு விற்றவா் கைது
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஸ்ரீரங்கம்: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஸ்ரீரங்கம் தேவி தியேட்டா் அருகில் லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு லாட்டரி விற்றவரை கைது செய்தனா். விசாரணையில் அவா் திருவானைக்கா சிங்கா் கோயில் தெருவை சோ்ந்த பாலு (40) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 10 வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.