அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இருவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இருவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தனிப்படை போலீஸாா் லால்குடி ரயில்வே மேம்பாலம் அருகே நடத்திய சோதனையில் டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் அனுமதியின்றி மது விற்ற பச்சனபுரம் பகுதியைச் சோ்ந்த பெ. சரவணன் (43), இதே பகுதியைச் சோ்ந்த அ. மாணிக்கம் ஆகியோரை கைது செய்து, அவா்கள் வைத்திருந்த 54 மதுபாட்டில்களையும், ரூ. 490-ஐயும் பறிமுதல் செய்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com