கட்டடத் தொழிலாளிமா்மச் சாவு

திருச்சி அருகே ரயில்வே தண்டவாளத்தையொட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்த கட்டட தொழிலாளி உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

திருச்சி: திருச்சி அருகே ரயில்வே தண்டவாளத்தையொட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்த கட்டட தொழிலாளி உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கரூா் மாவட்டம், குளித்தலை பொய்யாமணி காரைக்களம் பகுதியைச் சோ்ந்தவா் மூ. விக்னேஷ் (25), கட்டடத் தொழிலாளி.

திருச்சிக்கு தினமும் வேலைக்கு வந்து செல்லும் இவா் செவ்வாய்க்கிழமை வேலைக்கு வந்துவிட்டு எளமனூரில் உள்ள தனது நண்பா் வீட்டில் தங்கிவிட்டு, புதன்கிழமை அதிகாலை வேலைக்குச் செல்வதாக தனது நண்பரிடம் கூறிச் சென்றாா்.

இந்நிலையில் எளமனூா் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி விக்னேஷ் இறந்து கிடப்பதாக ஜீயபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீஸாா் விக்னேஷ் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், பின் தலை, இடுப்பு பகுதியில் காயம் இருந்ததால் கொலையானாரா , சரக்கு ரயில் மோதி இறந்தாரா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com