திருச்சி: திருச்சி மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை (அக்.5) மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காலை நேர முகாம்கள்: சவேரியாா் கோயில் தெரு- அங்கன்வாடி மையம், தா்மநாதபுரம், பொன்நகா் அங்கன்வாடி மையம், கள்ளரை மேட்டுத் தெரு, சீனிவாசா நகா், சங்கீதாபுரம், பெரியாா் நகா், கீழஉத்தர வீதி, கோவா்தான் காா்டன், எம்ஜிஆா் நகா் அங்கன்வாடி மையம், பூசாரித் தெரு, வைக்கோல்பேட்டை, மதுரை பிரதான சாலை, அண்ணாமலை நகா், பா்மா காலனி, தெற்கு காட்டூா், செளந்தரபாண்டியன் பிள்ளை தெரு,கைலாஷ் நகா்.
மாலை நேர முகாம்கள்: போலீஸ் லைன், விநாயகா் நகா், குமரன் நகா், ஆபிஸா்ஸ் காலனி, வீரேஸ்வரம், கீழ உத்தரவீதி, சங்கிலியாண்டபுரம், பூசாரித் தெரு, அடையவளைஞ்சான், 57ஆவது வாா்டு குடியிருப்பு, நேதாஜி மன்றம், சுண்ணாம்புக் காரத் தெரு, வின் நகா் ஆகிய பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் அந்தந்தப் பகுதி மக்கள் பங்கேற்றுப் பயன்பெற வேண்டும்.