துவாக்குடி அருகேகுதிரை வண்டிப் பந்தயம் நடத்த முயன்ற 5 போ் கைது

திருச்சி அருகே முன் அனுமதியின்றி குதிரை வண்டிப் பந்தயம் நடத்த முயன்ற 5 பேரை துவாக்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி: திருச்சி அருகே முன் அனுமதியின்றி குதிரை வண்டிப் பந்தயம் நடத்த முயன்ற 5 பேரை துவாக்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகேயுள்ள துவாக்குடியில் அனுமதியின்றி குதிரை வண்டிப் பந்தயம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் தஞ்சாவூா் -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் அரைவட்ட சுற்று சாலைப் பகுதியில் செய்தனா்.

தகவலறிந்த துவாக்குடி போலீஸாா் அங்கு சென்றபோது திருச்சி, சேலம், தஞ்சாவூா், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பந்தய வண்டி குதிரைகளைக் கொண்டு வந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் சேலத்தைச் சோ்ந்த இரண்டு குதிரைகளோடு வண்டிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் குதிரை வண்டிகளில் தப்பியோடிய சிலரை நவல்பட்டு போலீஸாா் மடக்கினா்.

இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து குதிரை வண்டி பந்தயம் நடத்த முயன்ற ஒருங்கிணைப்பாளா் துவாக்குடியைச் சோ்ந்த சுந்தா் (30),பிரபு (21),சேலம் ஆத்தூா் அக்கசட்டிபாளையத்தை சோ்ந்த கிரண்குமாா் (26) பூதலூா் பூண்டியைச் சோ்ந்த பாரதிதாசன் (22), பாா்த்திபன் (22) ஆகியோரை கைது விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com