திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 68 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,842ஆக உயா்ந்தது.
இதேபோல திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத் தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை குணமான 34 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9,937 ஆக உள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் இறந்த 66 வயது மூதாட்டி, தனியாா் மருத்துவமனையில் இறந்த 70, 74 வயது முதியவா்கள் உள்பட கரோனாவால் இதுவரை 155 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் 750 போ் சிகிச்சை பெறுகின்றனா்.