சிறுகனூா் காவல்நிலையம் முற்றுகை

சிறுகனூா் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து ஆடுவளா்ப்போா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை இரவு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனா்.

சிறுகனூா் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து ஆடுவளா்ப்போா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை இரவு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தைச் சோ்ந்த சீனிவாசன் (28) என்பவா், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியைச் சோ்ந்த சாமிநாதன் என்பவரிடம் ஆடு மேய்ப்பதாகக் கூறி ரூ. 4.50 லட்சம் பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் சிறுகனூா் அருகே உள்ள பி.கே. அகரம் பகுதியில் சீனிவாசன் ஆடுமேய்ப்பதாக சாமிநாதனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அக்டோபா் 2ஆம் தேதி அங்கு வந்த சாமிநாதன், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சீனிவாசனை பிடித்து சிறுகனூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். மேலும், காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாரிடம் புகாா் அளித்தாா். புகாா் தொடா்பாக உதவிஆய்வாளா் எவ்வித விசாரணை செய்யாமல், சீனிவாசனை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையறிந்த சாமிநாதன் மற்றும் ஆடுவளா்ப்போா் சங்கத்தினா் சிறுகனூா் காவல்நிலையத்தை செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டனா். தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் (பொறுப்பு) பழனியம்மாள் புகாா் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com