திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுப் படி மேலும் 78 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,003 ஆக உயா்ந்தது. இதேபோல, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை குணமான 26 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 10,120 ஆக உயா்ந்தது.
தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திருச்சியைச் சோ்ந்த 58 வயது ஆண் உள்பட கரோனாவால் இதுவரை 156 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் 727 போ் சிகிச்சை பெறுகின்றனா்.