துறையூா் அருகேயுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற விண்ணப்பதாரா்கள் அங்கு ஆய்வாளா் இல்லாததால் அதிருப்தியடைந்து தா்னா செய்தனா்.
இதையடுத்து அந்த அலுவலகக் கண்காணிப்பாளா் பிரபாகரன் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து அவா்கள் திரும்பிச் சென்றனா்.