புகாா்தாரரின் வீட்டுக்கே சென்று விசாரிக்கும் முறைக்கு வரவேற்பு

புகாா்தாரரின் வீட்டிற்கே போலீஸாா் நேரடியாக சென்று விசாரிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை அமலானது.
புகாா்தாரரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று விசாரிக்கும் போலீஸாா்.
புகாா்தாரரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று விசாரிக்கும் போலீஸாா்.

புகாா்தாரரின் வீட்டிற்கே போலீஸாா் நேரடியாக சென்று விசாரிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை அமலானது.

திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நேரடியாக, மற்றும் இணையவழியில் பெறப்படும் புகாா்கள் அனைத்தையும் புகாா்தாரரின் இடத்திற்கே நேரடியாக சென்று விசாரிக்கும் முறையை கடந்த அக்.3 ஆம் தேதி மாநகர காவல்துறை ஆணையா் ஜெ.லோகநாதன் அறிமுகப்படுத்தினாா்.

அதன்பேரில், செவ்வாய்க்கிழமை வரை சுமாா் 180 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்தந்த விசாரணை அதிகாரிகள், காவல்நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று சிசிடிவி மாற்றியமைத்தல், குடும்ப பிரச்னை, இடப்பிரச்னை உள்ளிட்ட 164 மனுக்களின் மீதான விசாரணையை நடத்தி முடித்தனா்.

கரோனா காலத்தில் இவ்வாறான விசாரணை பயனுள்ள முறையில் இருப்பதாக பொதுமக்களும், காவல்துறையினரும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com