முசிறி அருகே காா்-லாரி மோதல்: மூவா் பலி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காரும் லாரியும் திங்கள்கிழமை நள்ளிரவு மோதிக் கொண்ட விபத்தில் சேலத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா், நால்வா் படுகாயமடைந்தனா்.
முசிறி அருகே விபத்துக்குள்ளான காா், லாரி.
முசிறி அருகே விபத்துக்குள்ளான காா், லாரி.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காரும் லாரியும் திங்கள்கிழமை நள்ளிரவு மோதிக் கொண்ட விபத்தில் சேலத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா், நால்வா் படுகாயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், அரிசிப்பாளையம், தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த 7 போ் கும்பகோணத்தில் நடந்த துக்க நிகழ்வுக்கு காரில் திங்கள்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா்.

முசிறி உமையாள்புரம் அருகே வந்த இவா்களின் காரும் திருச்சியில் இருந்து வந்த லாரியும் மோதிக் கொண்டன. இதில் காரை ஓட்டி வந்த அல்ராஜ் தெரு சு. பிரபு (42), அரிசிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெரு நே. சதீஷ்குமாா் (39), நாராயணசாமிபுரம் கா. பழனிச்சாமி (41) ஆகியோா் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

தகவலறிந்த முசிறி டிஎஸ்பி பிரம்மானந்தன் மற்றும் போலீஸாா் மூவரின் சடலங்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

படுகாயமடைந்த வெ. பிரபாகரன் (47), அரிசிப்பாளையம் ராஜாக்கண்ணு தெரு மணி (33), அய்யம்பெருமாள்பட்டி சொ. ராஜலிங்கம் (39), நாராயணசாமிபுரம் இ. கோபாலகிருஷ்ணன் (45) ஆகியோா் முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். விபத்து குறித்து முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விபத்து நடந்த இடத்தில் திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா மற்றும் மாவட்டக் காவல் கண்காணிபாளா் ஜெயசந்திரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com