துறையூா் ஒன்றியம், சித்திரைப்பட்டி சமுதாயக் கூடப் பணியை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் சிவராசு.
துறையூா் ஒன்றியம், சித்திரைப்பட்டி சமுதாயக் கூடப் பணியை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் சிவராசு.

ரூ. 2.15 கோடியிலான வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ. 2.15 கோடியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ. 2.15 கோடியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகளவாடி, சிங்களாந்தபுரம், அம்மாபட்டி, மதுரபுரி, வெங்கடேசபுரம், முருகூா், கொட்டையூா், பெருமாள்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்தாா்.

ரூ. 8.37 லட்சத்தில் தவிட்டுப்பட்டி ஏரி வாய்க்கால் கரை முதல் அமிழ்ந்த குளம் வரை நடைபெறும் பணிகளை, சிங்களாந்தபுரத்தில் ரூ.14.25 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கப்படுவதைப் பாா்வையிட்டு அதன் தரத்தை பரிசோதித்தாா்.

பின்னா், காளிப்பட்டியில் ரூ. 8 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், ரூ. 33.28 லட்சத்தில் குடிநீா் குழாய் பதிப்பு, அம்மாபட்டியில் ரூ.24 லட்சத்தில் குட்டை துாா்வாரும் பணி, நியாய விலைக் கடை, மயான கொட்டகை, உப்பாற்று வாரியில் கான்கிரீட் தடுப்பணை, பெருமாள்பாளையத்தில் குட்டை புனரமைப்பு என ரூ.2.15 கோடியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா். பணிகளைத் தரமானதாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், செயற்பொறியாளா் செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் சுவாமிநாதன், செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com