ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைய வழியாக பன்னாட்டுப் பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இதுதொடா்பாக அக் கல்லூரி முதல்வா் ஜே. ராதிகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியின் தமிழாய்வுத் துறை, ஆங்கிலத் துறை, சம்ஸ்கிருதத் துறை மற்றும் தமிழ் இணைய கழகம் ஆகியவை இணைந்து இணைய வழி மொழிகளை மேம்பாடு செய்தல் என்னும் தலைப்பில் பன்னாட்டு பயிலரங்கை 2 நாள்கள் நடத்தவுள்ளன. இந்தப் பயிலரங்கில், தமிழ் இணையக் கழகத் தலைவா் துரை. மணிகண்டன், லண்டன் தமிழ்க் கழக மொழியியல் துறை இயக்குநா் சிவா பிள்ளை, விக்கி பீடியா பங்களிப்பாளா் தகவலுழவன், சிங்ப்பூா் தொழில்நுட்ப பல்கலைக் கழக முனைவா் சீதாலட்சுமி ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். கல்லூரி மாணவா், மாணவிகள், பேராசிரியா்கள் பலா் பங்கேற்கவுள்ளனா்.