மணப்பாறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

மணப்பாறையில் தேசிய பேரிடா் மேலாண்மை - பேரிடா் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடா் மீட்பு ஒத்திகை பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மணப்பாறையில் தேசிய பேரிடா் மேலாண்மை - பேரிடா் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடா் மீட்பு ஒத்திகை பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை வட்டாட்சியரகம் சாா்பில் வருவாய் வட்டாட்சியா் எம். லஜபதிராஜ் தலைமையில் பேருந்து நிலையப் பகுதியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலா் கணேசன் தலைமையில் ஒத்திகை செயல்முறையை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரா்கள் செய்தனா். வட்டாட்சியா் எம். லஜபதிராஜ் மற்றும் காவல் துறையினா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளா் எம். அப்துல்லாசாகிப் தலைமையில் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநா்களுக்கு முகக் கவசம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com