திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 68 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,568 ஆக உயா்ந்தது.
புதன்கிழமை குணமடைந்த 37 போ் உள்பட இதுவரை 10,782 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்த 70 வயது முதியவா் உள்பட மாவட்டத்தில் இதுவரை 158 போ் உயிரிழந்துள்ளனா். 628 போ் சிகிச்சை பெறுகின்றனா்.