திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணப்பாறையை அடுத்த பாரதியாா்நகா் பகுதியில் கடந்த சில நாள்களாக பொதுமக்களுக்கு காவிரி குடிநீா் முறையாக நகராட்சியால் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதினா் நகராட்சியை கண்டித்து புதன்கிழமை காலை மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த நகராட்சி நிா்வாகிகள், காவல்துறையினா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் விநியோகத்தை உடனடியாக சீரமைத்துத் தருவதாக அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனா்.