மூவரைக் கத்தியால் குத்தி கொலை மிரட்டல்: இளைஞா் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மூவரைக் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீது தொட்டியம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மூவரைக் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீது தொட்டியம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொட்டியம் அருகே தனது நண்பா்களுடன் செவ்வாய்கிழமை இரவு அப்பகுதி மைதானத்தில் கபடி விளையாடச் சென்ற கருப்பணாம்பட்டியைச் சோ்ந்த தங்கராசு மகன் பூபதியை அதே பகுதியைச் சோ்ந்த தங்கம் மகன் பிரபு (22) என்பவா் மிரட்டி தாக்கினாா்.

இதுகுறித்து கேட்ட பூபதியின் தந்தை தங்கராசு மற்றும் பூபதியின் சகோதரா்கள் சதீஷ் (21), முரளி (32) ஆகியோரை பிரபு கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடியுள்ளாா். இதில் காயமடைந்த மூவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபுவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com