ஸ்ரீரங்கம், மணிகண்டம் வட்டாரத்தில் காய்கனி தரைக் கடைகளுக்குத் தடை

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் காய்கனி தரைக்கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் காய்கனி தரைக்கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை கூறியது:

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் வட்டாரத்துக்குள்பட்ட கள்ளிக்குடியில் காய்கனிகள், பழங்கள் மற்றும் மலா்களுக்கான சந்தை ஏற்படுத்தப்பட்டு, விற்பனை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தச் சந்தையைச் சுற்றியுள்ள இடங்களிலும், தீரன் மாநகா், நாகமங்கலம், எடைமலைப்பட்டி புதூா், கிராப்பட்டி, சத்திரப்பட்டி, இனாம்குளத்தூா் ஆகிய இடங்களிலும் சாலையோரத்தில் உள்ளாட்சி அனுமதியின்றி தரைக்கடைகள் அமைத்து காய்கனி விற்பனை நடைபெறுவதாகத் தெரிகிறது.

எனவே சந்தையைச் சுற்றியுள்ள இடங்களில் அனுமதியின்றி தரைக்கடைகள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com