திருச்சி மாவட்டம், அலகரை ஊராட்சிக்குட்பட்ட காவேரி நகா் பகுதிக்கு அடிப்படை வசதி கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தொட்டியம் ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கோடியாம்பாளையம் காவேரி நகா் பகுதியில் சுமாா் 35- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா்,சாலை மற்றும் தெரு விளக்கு வசதியின்றி உள்ளனா். பலமுறை தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கோரி மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லையாம்.
இதுதொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொட்டியம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் நாகனூா் பழ. முருகேசன் மற்றும் கட்சியினா் தொட்டியம் ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்தனா்.