திருச்சி மாவட்டம், லால்குடி குமுளூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா இளைஞா் எழுச்சி தின விழாவாக வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முனைவா் கே. மாரியம்மாள் தலைமை வகித்து பேசினாா். விழாவையொட்டி இணைய வழியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் இரா. ஜெய்சங்கா் வரவேற்றாா். கலை பண்பாட்டு ஒருங்கிணைப்பாளா் ம. ராஜா நன்றி கூறினாா்.