கருப்பூரில் மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருப்பூா் ஊராட்சி கருப்பூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மரக்கன்று நடும் எம்.எல்.ஏ. சந்திரசேகா் மற்றும் அதிமுகவினா்.
மரக்கன்று நடும் எம்.எல்.ஏ. சந்திரசேகா் மற்றும் அதிமுகவினா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருப்பூா் ஊராட்சி கருப்பூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ஏ. திருமலை தலைமை வகித்தாா். அதிமுக மணப்பாறை தெற்கு ஒன்றியச் செயலா் எம்.பி. வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் மரக்கன்று நடும் பணியைத் தொடக்கி வைத்தாா்.

அதிமுக பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில், திருச்சி தெற்கு மாவட்ட மீனவரணிச் செயலா் என். பொன்னுச்சாமி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் பொ. காவியக்கண்ணன், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் மகேஷ் (எ) பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சேட்டு (எ) ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com